states

img

முஸ்லீம் மாணவன் மீது துப்பாக்கிச்சூடு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யா ராஜ் பகுதியில் உள்ள என்ஜினீ யரிங் மாணவனான லாரேப் ஹாஸ்மி (20) வியா ழனன்று கல்லூரிக்கு அரசுப் பேருந்தில் சென்று கொண்டி ருந்தார். டிக்கெட் விவகாரம் தொடர்  பாக நடத்துநர் விஸ்வகர்மா மற்  றும் மாணவன் லாரேப்ஹாஸ்மி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே மாணவன் கத்தியை எடுத்து தாக்கி யதாகக் கூறப்படுகிறது. “பேருந்து நடத்து நர் நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசினார். அதனால் வெட்டினேன்” எனக்  கூறி கல்லூரி முதல்வரிடம் சரண்டர் ஆனார் லாரேப் ஹாஸ்மி. கல்லூரிக்கு வந்து கைது செய்து அழைத்துச் செல்லும்  பொழுது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பி யோட முயன்றதாக கூறி லாரேப் ஹாஸ்மி யை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த  சம்பவத்தில் காலில் பலத்த காயத்து டன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் ஹாஸ்மி. தான் தப்பிக்க வில்லை என ஹாஸ்மி தகவல் தெரிவித் துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.